செம்பூவே பூவே உன்

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ...
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே ...
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ...ஒ ...
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ....ஒ ...
இமைகளும் உதடுகள் ஆகுமோ ...
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ (செம்பூவே )

அந்தி சூரியனும் குன்றில் சாய
மேன் வந்து கச்சை ஆஹா
காமன் தாங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்
தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா ..
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசை கேநிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பாட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீரியதோ ... (செம்பூவே )

இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ
அந்த காமன் அம்பு என்னை சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலருக்கும் சேலை பொன்பூவே ...
மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவைமயல் சாயுதே மன்னன் மணி மார்பிலோ ..
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணதலோர் ஆடை சூடிக்கொல்வேன் நானே
தாயாகும் வழி சொல்லாதே பஞ்சனை புதையலின் ரகசியமே ...
(சாய்ந்தாடும் )