வெண்மதி வெண்மதியே நில்லு

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி
அதில் தெரிந்தது அழகு தேவதை
அதிசய முகமே
தீப்பொறி என்
இரு விழிகளும் தீக்குச்சி என
என்னை உரசிட கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும்துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை
அதில் நலைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே..

உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்துன்பம் துன்பம் வேண்டாம்..