உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே

பல்லவி
========

க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...

சரணம்-1
========
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே

சரணம்-2
========
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..


ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்