யாரோ யாருக்குள் இங்கு யாரோ


பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப் போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-1
=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
      உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
      கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
      நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
      நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
      உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
      காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
      என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-2
=======
ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
      உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
      என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
      கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
      கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
      எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
 ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
       சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
      வங்கக்கடலும் வாய்க்கால் தான்
      அன்பே வா ஹா..
 
ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப்போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி