முதல் மழை என்னை நனைத்ததே..


முதல் மழை என்னை நனைத்ததே..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே..

முதல் மழை நம்மை நனைத்ததே..
மூடிவைத்த ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும்.. ஹ்ம்.. இதமாய் மிதந்ததே .. யீ..

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னைப்படம் எடுத்தேன்..
என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் இன்று உணர்தேன்..

எதுவும் புரியா புதுக்கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..

கையை மீறும் ஒரு குடையாய்..
காற்றோடு தான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடு தான் நானும் பறந்தேன்..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே ..

ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்.. என் வாழ்வில் அந்த நாளே இல்லை .. ஓ.. ஓர்நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை..

இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரினுள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலுமே என்றும் இருக்குமே..
நான் இருந்தாலுமே என்றும் இருக்குமே..