மலர்களே நாதஸ்வரங்கள்

ஆஆஆ...ஆஆ ஆஆ ஆஆ...ஆ.ஆஆ..ஆஆஆ

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே...மலர்களே

பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே...மலர்களே

கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ
மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழைத் தூவ

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்