சிறு தொடுதலிலே சின்னச்சின்னதாய் சிறகுகள் பூக்க

சிறு தொடுதலிலே சின்னச்சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க

இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்

எனக்கே என்னைத் தெரியாமல்
இருந்தேன் அன்பே எதற்காக
சிரிப்பால் உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே

நான் உனக்கென இருப்பது தெரியாதா
எதை நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் எனை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஒருமுறை காதல் இருமுறை மோதல்
பலமுறை சாதல் வாழ்க்கையிலே

ஒரு முறை கூடல் பலமுறை தேடல் நெருக்கத்திலே

ஒருமுறை காதல் இருமுறை மோதல்
பலமுறை சாதல் வாழ்க்கையிலே


அலையே இல்லா கடல் போல
இருந்தேன் அன்பே எதற்காக
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே
கிழக்காய் உதித்தாய் விடிந்தேனே

அழகே இல்லா நிலம் போல
பொறுத்தேன் அன்பே உனக்காக
கொடுத்தாய் உனை நீ முழுதாக
எடுத்தாய் எனையும் அழகாக

எதுவரை நீயோ அதுவரை நானோ
இதுவரை ஆசை காதலிலே

எதுவரை காதல் அதுவரை காமம் பூமியிலே

எதுவரை நீயோ அதுவரை நானோ
இதுவரை ஆசை காதலிலே

(சிறு தொடுதலிலே)


படம்: லாடம்
இசை: தரண்
பாடல்: பழனிபாரதி
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிசரண்