பாரிஜாதம் பகலில் பூத்ததே

ஆண்: கே.ஜே.யேசுதாஸ், பெண்: எஸ்.ஜானகி

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை அள்ளிவந்து
மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே
இளம் பூவே...இளம் பூவே
மனம் நீராடிடும் வேளை சுகவேளை
மலர் மேலே இளங்காற்றாடிடும்
சோலை புதுச் சோலை
அன்பே இங்கே வா வா என் அருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே

ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி...ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி
அலைபோலே...அலைபோலே
மனம் விளையாடிடும் நாளே திருநாளே
நதிபோலே எனை நீ நாடலாம்
மானே இளம் மானே
அன்பே இங்கே வா வா என் அருகினில்

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை அள்ளிவந்து
மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
லால்ல லாலா லல லால்லால்லலா
லாலா லால்ல லாலா லல லால்லால்லலா