எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

ஆ.......

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியா
தெளிய அடியர் ஓதும் வேத நாதமாகி

(எதிலும்..அறிவாரோ)

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்..ஏன்..
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்..ஏன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திடத் துணை வேண்டும்
ஆலம் கருநீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்

பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

(எதிலும்..அறிவாரோ)

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை..
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை..
உடுக்கலில் சரம் தொடுப்பவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுக்கலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படி ஆகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கை பிடியாகும்

சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
ஒற்றப் படித்து முடித்த ஒருத்தன்

(எதிலும்..நாதமாகி..அறிவாரோ)