ராதா...ராதா நீ எங்கே

ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
ராதா...ராதா நீ எங்கே

நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம் என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள் போதையில் மூழ்கிவிட்டேன்

கண்ணா...கண்ணா நீ எங்கே
ராதா எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
கண்ணா...கண்ணா நீ எங்கே

காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில் கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிட ஏக்கத்தில் ஓடி வந்தேன்

ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
ராதா...கண்ணா நீ எங்கே