மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

படம்: சிலம்பாட்டம்
பாடல்: மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

தாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்
மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்
வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே

என்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இருக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே……

உன் பெயரைத்தான் சொல்லி தினம்
தாவணியை போட்டேனே

உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே
மானே அடி மானே

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்
அந்த நாளை மனசும் நினைக்குமே

கண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே

என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே

உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே
தேனே வந்தேனே

ஹே…ஹே…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்