என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே

என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே
எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே

என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே
எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

கொள்ளைக்கொள்ளும் என்பாய் சேர்கையில்
இல்லை தொல்லை எந்த நாளுமே
சந்தம் சேராமல் இல்லை பாடல்கள்
வாழ்வும் சங்கீதமே
(கொள்ளைக்கொள்ளும்..)
கடலில் நதியும் சேர அலைகள் உதவலாம்
மனது உறவை சேர தன்மை விலகலாம்
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

எட்டுத்திக்கும் செல்லும் பாடலே
எல்லை இல்லா அன்பின் கூடலே
மாலை பூந்தென்றல் ஆடை சூடாதோ
எதன் கானத்திலே
(எட்டுத்திக்கும்..)
செவியய் உரசும் பாடல் மறந்து போகலாம்
மனதை உரசும் பாடல் உயிரில் தேங்குமே
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

படம்: மகேஷ் சரண்யா மற்றும் பலர்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சைந்தவி