ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


யாரு இத கண்டு கொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு சொல்வார்?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆரோடுமே!
துன்பம் தீர்க்க நீயும் உன் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோ்ர்க்குமே!


கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம்ல்லவா!
ஏழைக்கென்று தந்தது எல்லாம்
ஈசன் கையில் சேரும் அல்லவா!

கண்கள் இல்லா மனிதருக்கு...
கால்கள் என நாம் நடந்தால்!!!
நம் பூமியில் அநாதையா? அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

மண்ணில் தானே எல்லைக் கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால் தானா பிள்ளை பூமியில்?
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்!

நாதியற்ற பூவும் இல்லை
நட்டுவைத்ததால் வந்தது.
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னையின்றி யார் வந்தது?


எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அநாதையா?
அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


பாடியது: யேசுதாஸ்
படம்: நந்தலாலா
இசை: இளையராஜா