வருகிறாய் தொடுகிறாய்

போ...போ...
போ...போ...

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்


வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய்-ஆனால்
பொய் சொல்கிறாய்

போ...போ...

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி-அடி
உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைகாரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடநடா - அட
உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

அய்யோ... அம்மா ...நீ பொல்லாத ராட்கஷசி
ஏன்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதருவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு இருக்க விடு
அன்பே இருக்க விடு

வருகிறாய்..

விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடர்கறை மணலில்
மடியினில் கிடந்த நாட்கள் மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்தில பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் ஏதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
கடல் என்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லையே

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு

வருகிறாய்...
வருகிறேன்...

போ...போ.