உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில்
என்னை ஏந்தத்தான்

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்

நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையெ
ஆம் நமக்குள் ஊடலில்லை