மரணம் என்னும் தூது வந்தது

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக மாறிவிட்டது

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக