பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்

பல்லவி:

ஆண் : பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோடு மௌவல் மௌவல்

உன் பூ விழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் காற்கொலுசொலிகள் பொதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..

பெண் : வாஜி வாஜி வாஜி - என்
ஜூவன் நீ சிவாஜி
வாஜி வாஜி வாஜி - என்
ஜீவன் நீ சிவாஜி

அன்பா.. வாளை எடு
அழகைச் சாணையிடு!
உன் ஆண்வாசனை
என் மேனியில்
நீ பூசிவிடு!!

ஆண் : அடி நெட்டை... நிலவே..
ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு ..( வாஜி)


சரணம் - 1

ஆண் : ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்
என் தேனிலவே
ஒரு நிலவுடன் தான்

அவள் யாருமில்லை
இதோ இதோ இவள்தான்..

பெண் : புன்னகைப் பேரரசே
தேன் குழைத்து
பூவிக்குள் குளிப்பீரா?

விடியும் வரை
மார்புக்குள் இருப்பீரா?

விழிகளுக்குள்
சிறு துயில் கொள்வீரா?

ஆண் : பெண்களிடம்
சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல் புயல் நானடி..( வாஜி)

சரணம் : 2

ஆண் : பொன் வாக்கியமே..
வாய் வாத்தியமே..

உன் வளைவுகளில்
உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம் சுகம் கண்டேன்!

பெண் : ஆனந்த வெறியில் நான்
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி..
வெண்ணிலவை சகதியும் ஆக்கி விட்டேன்

ஆண் : அடடா...
குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாடு மூட்டை நீ ...(வாஜி)

கவிஞர் வைரமுத்து