மன்மதனே நீ கலைஞணா மன்மதனே நீ கவிஞணா
மன்மதனே நீ காதலனா மன்மதனே நீ காவலனா
என்னை உனக்குள் தொலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை
நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலறுகிறேன் உனக்கேதும் தெரிகிறதா?
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ
மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை வாசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் ஒதுக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ளு
Showing posts with label மன்மதன். Show all posts
Showing posts with label மன்மதன். Show all posts
Subscribe to:
Posts (Atom)