Showing posts with label பாய்ஸ். Show all posts
Showing posts with label பாய்ஸ். Show all posts

எகிறி குதித்தேன் வானம் இடித்தது

எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

ஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
(அலே அலே)

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)