Showing posts with label காதல் மன்னன். Show all posts
Showing posts with label காதல் மன்னன். Show all posts

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை

வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ

விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நான் மடி ஏந்தி மண்போல் யாசித்தேன்

காதல் மன்னன்
பரத்வாஜ்

பாடல்: திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
குரல்: பரத்வாஜ், அனுபமா
வரிகள்:

நான் மடி ஏந்தி மண்போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏந்தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது மெய்தானே உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

ஆஹா...ஆஹா...ஆ...ஆ...

மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு

யெஹி யெஹி யெஹி யெஹி
காதல் அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது சொல்லாத சோகம் அல்லவா
அதை மௌளனங்கள் சொல்லும் அல்லவா
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது
அதை உன் காதில் சொன்னால் நல்லது
மௌளனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா